மகோற்சவ கால பூசைகள் ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்தபதி  சி ஞானமூர்த்தி தலைமையில் திருப்பணி வேலைகள் மிக துரிதமாக நடைபெறுகின்றன

 

எமது இவ்விணையத்தளம்பற்றி செய்தி வெளியிடும் இலண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள்

 
வங்கிக்கணக்கிலக்கங்கள் COMMERCIAL BANK JAFFNA No :1060024260 (Swift Code- CCEYLKLX)மருதடி விநாயகர் ஆலய Trust மானிப்பாய் | இலங்கை வங்கி மானிப்பாய் No: C 2279

தொடர்பு: 0094 21 222 3217 / 0094 21 4591569 (பகல்) மற்றும் 0094 21 222 5412 / 0094 773618960(இரவு)  தொலை நகல்: 0094 21 222 2751
ஈமெயில் மூலமான தொடர்புகளுக்கு  <info@manipaymaruthady.com> எனும் முகவரிக்கு ஈமெயில் செய்யவும்

வடம் பிடிப்போம் வாருங்கள் -(புதியது)
குடமுழுக்கை நோக்கி
நாங்கள்
எங்கள் குறைவுகளை
நிவர்த்த வாருங்கள்
முடிந்தவரை தாருங்கள்
விநாயகனின் அருள் பெற்று
வசந்தமாய் வாழுங்கள்
மருத நிழலும்
மண் ஒழுங்கை வாசமும்
பூவரச வேலியும்
புல்லரிக்கவில்லையா
மாறுகரை வேட்டியும்
வடம்பிடிக்கும் வேட்கையும்
உங்கள் மனதை
குடையவில்லையா
விரைவாக அழைப்போம்
விரைந்தோடி வாருங்கள்
வடம்பிடிப்போம்
வாருங்கள்
நீங்கள்
கல்வி கற்ற நிலங்கள்
கல்லெறிந்த மரங்கள்
சாய்ந்துறங்கிய தாய்மடிகள்
உங்கள் வளவுகள்
மாமன் வீடுகள்
மதில் பாய்ந்த நினைவுகள்
வயல்வெளிகள்
சணல் பற்றைகள்
நீச்சல் கற்ற
கிணறுகள் அத்துடன்
நீங்கள் தூக்கப்
பின்னடித்த மருதடியானின்
குதிரை வாகனம்
அத்தனையும் காட்ட
உங்கள் பிள்ளைகளை
கூட்டி வாருங்கள்
மலரும் நினைவுகளுடன்
உங்களுக்காகக் காத்திருக்கிறோம்
விரைவாக அழைப்போம்
விரைந்தோடி வாருங்கள்
வடம் பிடிப்போம்
வாருங்கள்





[திருவிழாக்கால தொடர் சொற்பொழிவு]
 

 ( மேலும் படங்கள் )

 
செய்தித்துளிகள்
01-தர்மகர்த்தா சபையினரால் விடுக்கப்பட்டுள்ள விசேட வேண்டுகோள் - 10-04-2010

ஆலய உட்பிரகார தரை வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேடமான கருங்கற்களால் ஆன பளிங்குகற்களால் இவ்வேலை நடைபெற உள்ளது.ஒருசதுர அடிக்கான கற்களுக்கும் பதிப்பதற்கும் உரிய செலவாக  1000 ரூபாவாகும் இவ்விதம் 12,000 சதுர அடிகள் பதிக்கப்படவேண்டி உள்ளது இவ் வேலையினை தனித்து ஒருவரின் பங்களிப்பில் செய்யாமல் அனைத்து அடியவர்களினதும் பங்களிப்புடன் செய்வதற்கு தீரமானித்திருக்கின்றோம்.எனவே தாங்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த சதுர அடிகளுக்கான செலவுத்தொகையினை அனுப்பி இந்த தரை வேலைத்திருப்பணியினை நிறைவுசெய்ய உதவுவதுடன் எம்பெருமானின் திருவுலா வரும் உள்வீதியை பளிங்குகற்களால் ஆக்கி இத்திருப்பணியை நிறைவுசெய்வோம்

02-மண்டலாபிஷேகம் செய்வதற்கு முற்பணம் செலுத்திய அன்பர்களின் பெயர் விபரம் விரைவில்.....
 
 
     
     
 

 


2010 புதுவருடப்பிறப்பு படங்கள் இங்கே  

புதிய திருப்பணி
 வேலைகள் 2010

 

 
 

All Rights Reserved 2010© Manipay Maruthady Vinayakar