|
புலம் பெயர்ந்த எம் உறவுகளே இணையதளச்
சாளரத்தினூடாக நாங்கள் உங்களுடன் கைகூப்பி
கைகுலுக்கிக் கொள்கிறோம்
உங்கள் மனங்களில்……
பசுமை நிறைந்த வயல்களும்…
பனைவடலியும்…பூவரசநிழலும்…
ஆற்ற முடியாத ஆவலாய் நிலைத்திருக்கும்.
தைத்திங்களில் பானை வைத்துப் பொங்கிய……
தேனைப் போன்ற நினைவுகளுடன்……
மாசி போய் பங்குனி வந்துவிட்டால்……
எல்லோர் மனங்களிலும் எப்போது— சித்திரை வரும் என
நித்திரையிலும் நினைப்பிருக்கும்……
உங்கள் எண்ணங்களை ஒருமுறை மீட்டிப் பாருங்கள்……
அங்கே மானிப்பாயில் ஓர்……
பதினெட்டு நாள் இருக்கும்…
மருதடியான் பாதங்களின் நினைவிருக்கும்.
சித்திரை வருடம் தன்னில்…நீங்கள் வந்துபோன
தடம் இருக்கும்.
வடம்பிடித்த உணர்விருக்கும்……
அந்த வயல் வெளிகளில் சணல் இருக்கும்…
கதகதப்பான காற்றிருக்கும் ………
ஊற்ருப் போல் பிள்ளையாரின் அருளிருக்கும்
……
தேற்றுவதற்கு யாரும் இல்லாத போது
ஆற்றுவதற்கு ஆண்டவனே என்று
கைகூப்பி கண்தொழுத மருதடி மண்ணிலிருந்து
உங்களுக்குகோர் அன்பான வேண்டுகோள். |